பாகிஸ்தானில் பாதுகாப்பு தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானில், பாதுகாப்பு தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர்.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டாங்க் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.