மக்களவை தேர்தலில் ஸ்டாலினின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என சீதாராம் யெச்சூரி கருத்து.!

அடுத்து வரக்கூடிய மக்களவை தேர்தலில் புதிய அரசு அமைவதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசுகையில், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் புதிய அணி உருவாகி மத்தியில் புதிய ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். 

மேலும் மத்தியில் மதசார்பற்ற அரசு அமைவதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றும், இதற்காக பாரதிய ஜனதா அல்லாத மாநிலங்களின் முதல்வர்களை ஸ்டாலின் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.