ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு 39 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறியதாக ஐ.நா. தகவல்

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் 39 லட்சத்திற்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில்,  ரஷ்யாவிற்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்ய தாக்குதலினால் வாழ்வாதாரம் இழந்த உக்ரைன் மக்கள் அகதிகளாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

அதிகபட்சமாக போலந்தில் 23 லட்சம் பேரும், ருமேனியாவில் 6 லட்சம் பேரும் புகலிடம் கேட்டு தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 65 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து உள்நாட்டிலே இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.