சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகத்தில் மோதிய RX100..நடந்து சென்றவரும், மோட்டார் சைக்கிளில் வந்தவரும் உயிரிழப்பு..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகத்தில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில்,நடந்து சென்றவரும், வாகனம் ஓட்டியவரும் உயிரிழந்தனர்.

நல்லூர் காமராஜ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆலங்குளம் அம்பை சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆட்டோ ஒன்றை முந்தியவாறு மாரிமுத்து என்ற இளைஞர் அதிவேகத்தில் ஓட்டி வந்த யமஹா ஆர்.எக்ஸ் 100 (Yamaha RX100)பைக் முருகேசன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் கீழே விழுந்த மாரிமுத்துவும் காயமடைந்தார். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.