தாய் இறந்த துக்கத்தில் மகள் செய்த விபரீத செயல்.. சென்னையில் நடந்த சோகம்..!

தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு தாட்சாயிணி  என்ற மனைவியும் பவதாரினி, கல்யாண் என இரு குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில், தாட்சாயிணி  கடந்த மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

தாய் இறந்ததால் அவரது மகள் பவதாரினி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.