இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: ராஜபக்சே உத்தரவு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அவசரநிலையை பிரகடனம்செய்து அதிபர் கோத்தபயராஜபக்சே உத்தரவிட்டார்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து 1948ல் அண்டை நாடான இலங்கை சுதந்திரம் பெற்ற பின், அந்நாடுஇதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடிஏற்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் பல மடங்கு உயர்ந்து வருகின்றன. வரலாறு காணாத மின் வெட்டால்மக்கள் கடும் அவதிக்குஆளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது. பொறுமை இழந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் முற்றுகைபோராட்டத்தில்ஈடுபட்டனர். இதை அடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி அதிபர் ராஜபக்சே நேற்றிரவு உத்தரவிட்டார். இதன் வாயிலாக, சந்தேகத்துக்கு இடமானவர்களை கைது செய்வதற்கும், ராணுவத்துக்கு பரந்த அதிகாரத்தை வழங்கும் கடுமையான சட்டங்கள் அமலுக்கு வந்தன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.