டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இன்று முதல் ரத்து.

டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட 2000 ரூபாய் அபராதத் தொகை 500 ரூபாயாகக் குறைக்கப்பட்ட நிலையில் அதனை நீக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் காரில் ஓட்டுனர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும் உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. டெல்லியில் கோவிட் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளதையடுத்து முகக்கவசம் தொடர்பான அபராதம் ரத்து செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.