12 வயது பெண் குழந்தை யாருக்கு? முன்னாள் மனைவியுடன் உரிமைப் போர் தொடங்கிய தாடி பாலாஜி

Actor Thaddi Balaji Press Meet : தனது முன்னாள் மனைவியிடம் இருந்து தனது குழந்தையை மீட்டு தரக்கோரி நடிகர் தாடி பாலாஜி, தமிழக குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக அனைவராலும் அறியப்பட்டவர் தாடி பாலாஜி. பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள இவர், கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.  

அதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் 12 வயது பெண் குழந்தை நித்யாவிடமே வளர்ந்து வருகிறது. ஆனால் தற்போது நித்யாவின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக தனது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் நித்யாவிடம் இருந்து குழந்தையை மீட்டு தருமாறு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் தாடி பாலாஜி புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி கூறுகையில்,

நித்யா ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார். அப்படி இருக்கும்போது அவர் தாராளமாக தனது விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இதற்காக மகளின் வாழ்க்கையை அவர் கெடுக்க வேண்டாம். சமீபத்தில் எனது மகள் படிக்கும் பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது 3 தேர்வு மட்டுமே எழுதியுள்ளார். அதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஆனால் ஏன் மீதி 3 தேர்வு எழுதவில்லை என்று கேட்டால், ஈவெண்ட்க்கு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டதாக நித்யா கூறுகிறார். படிக்கின்ற குழந்தையை இப்படி அழைத்துக்கொண்டு சென்று படிப்பை கெடுக்கிறார். இதனால் அவரை நித்யாவிடம் இருந்து மீட்க வேண்டும். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவரிடம் இருந்து மீட்டு என்து குழந்தைக்கு என்ன வேண்டுமோ அதை செய்கிறேன்.

நித்யாவிடம் குழந்தை இருந்தால் பாதுகாப்பாக இருக்காது. அவரை மீ்ட்டு வெளியில் சேர்த்துவிட்டு, அவர் எப்போது அப்பா நல்லவர் என்று புரிந்துகொள்கிறாரோ அப்போது என்னுடன் வரட்டும். அதுவரை நான் வெயிட் பண்றேன் என்று கூறிய அவர், நித்யாவை பற்றி தவறாக சொல்லவில்லை. உங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். நமக்குள் இருக்கும் சண்டையில் குழந்தையின் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்

மேலும் குழந்தையிடம் தன்னைப்பற்றி அவதூறாக சொல்லி அவர் என்னை பார்த்தாலே பயந்து ஓடும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.