இந்தி படத்தில் நடிக்க மாட்டேன்: மகேஷ் பாபு திட்டவட்டம்

ஐதராபாத்: இந்தி படத்தில் எந்த காலத்திலும் நடிக்க மாட்டேன் என்றார், மகேஷ் பாபு. இதுபற்றி அவர் கூறியதாவது:  தெலுங்கில் நான் நடித்த பிசினஸ்மேன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதாக சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. எனது படத்தின் ரீமேக்கில் மட்டுமில்லை, ஒரிஜினல் கதை கொண்ட இந்தி படத்தில் கூட நடிக்க மாட்டேன். தெலுங்கு படங்களில் நடித்துதான் நான் புகழ்பெற்றேன். இப்போது தெலுங்கு உள்பட தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் வியாபாரம் இருக்கிறது. இந்தி சினிமாவிலும் தென்னிந்திய மொழி படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது, நான் ஏன் வேறு மொழிகளில் நடிக்க வேண்டும்? அதுவும் இந்தியில் நடிக்கும் எண்ணமே கிடையாது. தொடர்ந்து எனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன். சர்காரு வாரி பாட்டா படத்தை முடித்துவிட்டேன். மே மாதம் படம் ரிலீசாகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.