குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டுவதாக கூறி கல்லூரி மாணவி தற்கொலை ; காதலன் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தான் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு ஒருவர் மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டான்.

தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி அரசு கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் இவ்வாறு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனையடுத்து, கடிதத்தையும், மாணவியின் செல்போனையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், நைனார்குப்பத்தைச் சேர்ந்த லோகநாதனும் அந்த மாணவியும் காதலித்து வந்ததும், வண்டியாம்பள்ளம் கிராமத்தில் மாணவி தங்கி படித்த போது மாணவிக்கு தெரியாமல் குளிப்பதை வீடியோ எடுத்து லோகநாதன் மிரட்டியதும் தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக லோகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.