எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? – ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி,
பெட்ரொல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
8 ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரியாக ஒன்றிய அரசு 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வாரு குடும்பத்திடமிருந்து எரிபொருள் வரி வசூல்செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் சராசரியாக 1,00,000 ரூபாய் எரிபொருள் வரியாக மத்திய அரசு வசூலித்துள்ளது ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.