கெட்டிமேளம்…! கெட்டிமேளம்….! கன்ஃபார்ம் ஆன ரன்பீர் கபூர்- ஆலியாபட் திருமணம்…!

விக்கி கவுஷல் மற்றும் கத்ரீனா கைஃப் திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிலையில், பாலிவுட்டின் அடுத்த பெரிய நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமணம் எப்போ நடக்கப் போகிறது என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு நிச்சயம் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், வெகு விரைவாக அவர்கள் திருமணம் நடைபெற உள்ளது பாலிவுட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. மறைந்த பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் தான் ரன்பீர் கபூர். அதே போல இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் தான் ஆலியா பட்.

‘மணி ஹெய்ஸ்ட்’ பட்டி டிக்கரிங்கா..?: ‘பீஸ்ட்’ பட டிரெய்லரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இருவருமே பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள் தான். இருவருக்கும் எதிராக ஏகப்பட்ட நெபோடிச சர்ச்சைகள் வெடித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் தாண்டி தங்களது நடிப்பால் பாலிவுட் ரசிகர்களை இருவரும் கவர்ந்துள்ளனர்.ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் எந்தவொரு பர்சனல் விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக சொன்னதே கிடையாது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்றும்
டேட்டிங்
சென்றுள்ளனர் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியான போதும் வாய் திறக்காத இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னர் தான் தங்களது ரகசிய காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.

காதலை அறிவித்த பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் இருவரது திருமணம் எப்போது? என்கிற கேள்வி தான் கடந்த ஆண்டில் இருந்து ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஏப்ரல் மாதத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதியாகி உள்ளது. நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் குறைந்த நிலையிலும், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் சினிமா பிரபலங்களை அழைத்து கத்ரீனா கைஃப் நடத்தியதை போல ராயல் வெட்டிங்காக இல்லாமல், எளிமையான முறையில் குடும்ப உறவினர்கள் மற்றும் முக்கியமான நண்பர்கள் சூழ நடக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெய்ப்பூரில் அரண்மனையில் இவர்கள் திருமணமும் செம கிராண்டாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை செம்பூரில் உள்ள ஆர்.கே. ஹவுஸில் ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் இறுதி கூட இல்லையாம். ஏப்ரல் இடையிலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர். திருமண தேதி மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ராஜமெளலியின்
ஆர்ஆர்ஆர்
படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆலியா பட்டின் காட்சிகள் அதிகளவில் இடம்பெறாத நிலையில், ஆலியா பட் ராஜமெளலியை அன்ஃபாலோ செய்து விட்டார் என்றும் ஆர்ஆர்ஆர் போஸ்ட்டுகளை நீக்கினார் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. அதற்கு விளக்கம் அளித்த ஆலியா பட் பழைய போஸ்ட்டுகளை டெலிட் செய்வது என் வழக்கம் அதை தவறாக பிரச்சாரம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், அந்த பிரச்சனையை முடித்து வைக்க தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய புரமோஷனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கங்குபாய் கத்தியவாடி
, ஆர்ஆர்ஆர் படங்களை தொடர்ந்து வருங்கால கணவர் ரன்பீர் கபூருடன் ஆலியா பட் நடித்துள்ள அடுத்த பிரம்மாண்ட படமான
பிரம்மாஸ்த்ரா
திரைப்படத்தின் ரிலீசுக்காக ஆலியா பட் காத்திருக்கிறார். அந்த திரைப்படம் வெளியான பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாதமே டும் டும் டும் சத்தம் கேட்கப் போகிறது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

அடுத்த செய்திபிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளாஷ்பேக்’ திரைப்படம் வெளியிடு…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.