பொருளாதார நெருக்கடி- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா?

கொழும்பு:
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடிவருகிறார்கள்.
 
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. 
இந்த சூழ்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கியதாகவும், ஆனால் ராஜினாமா கடித்தை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.