திருச்சி மாவட்டம் குமுளூரை சார்ந்த பாலசுப்ரமணியம் என்பவருக்கு மீனா என்ற மனைவியை இழந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகளும், 2 மகான்களும் உள்ளனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அங்கு வேலை செய்து கொண்டு தனது மனைவி மீனாவுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் மனைவி மீனாவுக்கு சமூக வலைதளங்கள் மூலம் சுரேஷ் என்ற இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மீனா தனது சொந்த செலவில் சுரேஷ் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி உள்ளார்.
அதனை எடுத்து வெளிநாட்டிற்குச் சென்ற சுரேஷ் மீனாவுடன் நிர்வாண வீடியோ கால் பேசி அதை ரெக்கார்ட் செய்துள்ளார். மேலும், அடிக்கடி அவரை நிர்வாண வீடியோ கால் செய்ய சொல்லியும் மிரட்டியுள்ளார். மேலும் மீனாவிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தர மறுத்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீனா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது மனைவி சொந்த ஊரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.