மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் காலூரியில் சேர்ந்துள்ளனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு கட்டிடங்கள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இதனால் மருத்துவம் பயில சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுவது கேள்விக்குறியானது.
இந்நிலையில் இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டன.
இதனையடுத்து 8 பேராசிரியர்கள் இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.