“உட்கட்சித் தேர்தலில் எந்தவிதமான பதவிக்கும் போட்டியிடக் கூடாது” பாஜக பிரமுகர் மீது கொடூர தாக்குதல்

கோவையில் உட்கட்சித் தேர்தல் பிரச்சனையில் பாஜக பிரமுகர் ஒருவரை கொடூரமாகத் தாக்கி கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அதே பகுதியில் புகைப்பட நிலையம் வைத்துள்ளார்.

இவர் பாஜகவில் பொறுப்பில் உள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் அடியாட்கள் சிலருடன் கடந்த 30ஆம் தேதி அவரது கடைக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவன் மட்டும் முதலில் உள்ளே சென்று, கட்சியில் நடைபெறப்போகும் உட்கட்சித் தேர்தலில் எந்தவிதமான பதவிக்கும் போட்டியிடக்கூடாது என ஜெயக்குமாரை மிரட்டினான் என்று கூறப்படுகிறது. அதற்கு ஜெயக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவரைத் தாக்கத் துவங்கியுள்ளான்.

பதிலுக்கு ஜெயக்குமாரும் தாக்கவே, இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். சிறிது நேரத்தில் உள்ளே வந்த அடியாட்கள் 5க்கும் மேற்பட்டோர், ஜெயக்குமாரை சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.