கிரீஸில், விலைவாசி உயர்வை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிரீஸில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற பேரணியில் 10,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பத்தாண்டுகளுக்கு மேலாக நிலவிய நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்த கிரீஸ் நாட்டிற்கு கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பொது போக்குவரத்து இயங்காததால் பள்ளி, மருத்துவமனைகள் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.