சொத்து வரி உயர்வைக் கண்டித்துப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழகத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்துச் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

சொத்து வரி உயர்வு தொடர்பாகக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள், வரி உயர்வைத் திரும்பப் பெறக்கோரி முழக்கமிட்டு அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.