தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை கோரும் மனு விரைவில் விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, 
தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரும் மனுக்கள் ஓராண்டுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் உள்ளன. 

சுங்கவரி துறையினரின் சோதனையை தவிர்க்கும்வகையில் ரூ.40 கோடி, தேர்தல் நிதி பத்திரத்தின் வாயிலாக செலுத்தப்பட்டுள்ளது. இது மக்களாட்சியை சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வாதிட்டார். அவரது முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த மனு விரைந்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.