ஏழு மாதங்களுக்கு பின்னரே பொது தேர்தல்: பாக்., தேர்தல் ஆணையம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: அடுத்து வரும் ஏழு மாதங்களுக்கு பின்னரே பொது தேர்தல் நடத்த முடியும் என பாக்., தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

latest tamil news

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே பார்லிமென்ட் கூட்டத்தை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.

latest tamil news

இந்நிலையில் அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்து வரும் ஏழு மாத கால கட்டத்திற்குள் தேர்தல் நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவதற்கு குறைந்த பட்சம் ஏழு மாத கால அவகாசம் தேவை. அதனை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதத்தில் தான் தேர்தல் நடத்த முடியும் . எனவே அது வரையில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தெரிவித்து உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.