தனுஷை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளும் 'அந்த' நபர்: ரசிகர்கள் மகிழ்ச்சி..!

நடிகர்
தனுஷ்
தனது அண்ணன்
செல்வராகவன்
இயக்கத்தில் ‘
நானே வருவேன்
‘ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

‘நானே வருவேன்’ படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் நடிக்கிறார் தனுஷ். ஒரு கெட்டப்பில் ஸ்டைலிஸ் இளைஞராக இருக்கும் தனுஷ், மற்றொரு கெட்டப்பில் நடுத்தர வயது தோற்றம் கொண்ட கெட்டப்பில் உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

கவர்ச்சி பேயாக மாறிய சன்னி லியோன்: வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது அண்ணன் செல்வராகவனை தனுஷ் போட்டோ எடுப்பதை போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

ஏற்கனவே ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தளத்தில் தனது மகன் யாத்ராவுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்தது. ஐஸ்வர்யாவை பிரிந்ததை தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட தனுஷ், தற்போது தனது அண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் கவலைகள் மறந்து சந்தோஷமாக இருக்கிறாராம். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“தளபதி 66” அப்டேட்; ரசிகர்கள் ஹேப்பி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.