புத்தாண்டிற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால், புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
 
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களைப் போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக  அரச சேவை சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
 
இதன்படி, சம்பளம் வழங்கும் திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.