இந்தியாவில் கொரோனா நிலவரம்- 5 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த தினசரி பாதிப்பு

புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 861 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5-ந் தேதி பாதிப்பு 795 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5 நாட்கள் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருந்தது.

இந்நிலையில் இன்று பாதிப்பு மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 132 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் பலியானோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 83, நேற்று 29 ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று 6 ஆக குறைந்தது.

இதில் கேரளாவில் விடுபட்ட 5 மரணங்கள் அடங்கும். இதுதவிர டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,21,691 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 929 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 3 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 11,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 74 குறைவு ஆகும்.

விடுமுறை நாளான நேற்று 2,44,870 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 185 கோடியே 74 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 2,71,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 79.41 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.