பிரபல நடிகையை கடத்தி காருக்குள் பாலியல் தொல்லை.. வசமாக சிக்கிய காவ்யா மாதவன்!

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வரும் வழியில் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தன்னை கைது செய்த விசாரணை அதிகாரியை கொலை செய்ய
திலீப்
தனது உறவினர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது. இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஸ்கர்ட்டா? இல்ல டாப்பா? கன்ஃபியூஸ் பண்ணும் நாகினி நடிகை!

இதையடுத்து அவரையும் விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் கேரள ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவ்யா மாதவனுக்கு உள்ள தொடர்பை உறுதி செய்யும் வகையில், நடிகர் திலீப்பின் சகோதரி கணவர் சூரஜ் மற்றும் திலீப்பின் நண்பரான சரத் ஆகியோர் போனில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடவுளுடன் ஒப்பிட்ட விஜய்… எஸ்ஏசி செம ஹேப்பி… என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

திலீப்பின் முன்னாள் மனைவியான நடிகை மஞ்சு வாரியரும் அந்த ஆடியோவை கேட்டு அதில் பேசியிருக்கும் குரல்களை கேட்டு உறுதி செய்துள்ளார். , இதுதொடர்பாக விசாரணை நடத்த இன்று நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் தற்போது சென்னையில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து வரும் புதன் கிழமை ஆஜராகுமார் அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

BEAST தமிழகத்திலும் தடையா? – வலுக்கும் கோரிக்கைகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.