பாகிஸ்தானில் பதவி இழந்த இம்ரான்கானுக்கு ஆதரவாகப் போராட்டம்

இம்ரான் கானுக்கு ஆதரவாக உள்நாடு, வெளிநாடு என அவரது ஆதரவாளர்கள் மெகா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் இம்ரான் கானின் பிரதமர் பதவியை பறித்தது. இன்று பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், எதிர்கட்சி வேட்பாளர் ஷபாஸ் ஷெரிப் தான் பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி மாற்றத்தை ஏற்காத இம்ரான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவார, லாஹூர், உள்ளிட்ட பகுதிகளில் அலைகடல் என திரண்டு நகரங்களை முடக்கினர்.

உள்நாடு மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் மீண்டும் இம்ரான் பிரதமர் பதவி ஏற்க வேண்டுமென நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.