காஷ்மீர் பிரச்னையை கிளப்பிய ஷெபாஸ்| Dinamalar

பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப், நேற்று பேசுகையில் காஷ்மீர் விவகாரத்தை கிளப்பினார். அவர் கூறியதாவது:இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படாத வரை, அதற்கு சாத்தியமில்லை.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து, அங்கு வசிக்கும் மக்கள் ரத்தம் சிந்துகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில், அரசியல் மற்றும் துாதரக ரீதியிலான எங்கள் ஆதரவை காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.