தேதி குறிச்சாச்சு! – பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து
இம்ரான் கான்
ஆட்சியை கவிழ்த்தது. இம்ரான் கான் பிரதமர் பதவி பறிபோனதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( என்) கட்சியின் தலைவருமான
ஷெபாஸ் ஷெரீப்
பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்வதற்கு 4 வாரங்கள் அனுமதி வழங்கி லாகூா் உயா்நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 4 வாரங்களுக்குள் அல்லது உடல்நலம் பெற்றதும் பாகிஸ்தான் திரும்பி வழக்குகளைச் சந்திப்பேன் என நவாஸ் சாா்பில் உறுதிமொழிப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவா், அங்கேயே தங்கி உள்ளாா்.

இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிக்குது.. கவனிச்சுட்டுதான் இருக்கோம்.. அமெரிக்கா!

இந்நிலையில், அவரின் இளைய சகோதரா் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகத் தோவு செய்யப்பட்டதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் மே மாதம் ரமலான் பண்டிகைக்குப் பின்னா் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக பிஎம்எல்-என் கட்சி மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.