மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச் சூடு… அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் படு பிசியான இடம்.

அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சுரங்கப் பாதையில் இன்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் பயணிகளை நோக்கி திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த கொடூர தாக்குதல் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து
நியூயார்க்
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியில் இருந்து போலீசார் வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளதாக மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அன்று முள்ளிவாய்க்கால்.. இன்று காலிமுகம்.. பற்றி எரியும் இலங்கை.. சிக்கலில் ராஜபக்சே!

கண்காணிப்பு கேமிராவில் போலீசார் ஆராய்ந்ததில், அதில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகிப்படுகிறது.

ஆடைகளில் ரத்தம் படிந்த நிலையில் சுரங்க நடைபாதையில் விழுந்து கிடக்கும் பயணிகளின் புகைப்படங்கள் சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.