#விழுப்புரம் || அட்டைப்பெட்டி நிறைய தங்க நகைகள்., ஓடும் வாகனத்தில் ஆட்டையை போட்ட ஆசாமிகள்.!

சென்னை வில்லிவாக்கத்தில் பகுதியில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சேர்ந்த தங்கப் பெருமாள் குடும்பத்துடன் தங்கி, மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக தனது குடும்பத்துடன் ஊருக்கு சென்றுள்ளார்.

ஊருக்கு பயணம் செய்யும் போது நகை உள்ளிட்ட பல முக்கிய பொருட்களை அட்டைப் பெட்டிகளில் கட்டி, டெம்போ ட்ராவல் வாகனத்தின் மேல்பகுதியில் வைத்து சென்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள சுங்கச்சாவடி மையப்பகுதியில் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து உள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் ஒரு அட்டை பெட்டி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

தங்களது வாகனத்தை தியாகதுருகம், கூட்டு ரோடு சின்ன குப்பம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையில் நிறுத்திவிட்டு டீ குடித்த போது தான், இந்த பெட்டியை யாரேனும் திருடி இருப்பார்கள் என்று யோசித்தனர்.

இதனடிப்படையில் தங்க பெருமாள் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.