பீஸ்ட் படத்தில் இணைந்தது எப்படி? இயக்குநர் செல்வராகவன் பதில்

Director Selvaragavan Say About Beast Movie : காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என்ஜிகே உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களை இயக்கிவர் இயக்குநர் செல்வராகவன். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்த செல்வராகவன் திடீரென சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக விஜய் நடிப்பில் நாளை வெளியாக உள்ள பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்துள்ளார். செல்வராகவன் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான உடனே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாக பீஸ்ட் படத்தின் டிரெய்லரில் செல்வராகவனின் கேரக்டர் பெரிய கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், தற்போது கலாட்டா என்ற யூடியூப் சேனிலில் பேட்டி அளித்துள்ள செல்வராகவன் பீஸ்ட் படம் குறித்து இந்த படத்தில் இணைந்தது எப்படி என்பது குறித்தும் பேசியுள்ளார்.

இதில் பீஸட் படத்தில் இணைந்தது குறித்து பேசியுள்ள செல்வராகவன், இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர் நடிகர் என இரண்டும் நான் தனியாக பார்க்கவில்லை. இயக்குநர் மற்றும் நடிகராக மற்றவர்களை சந்திக்கும்போது இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை

பீஸ்ட் படத்தின் கேரக்டருக்காக தனியாக எதுவும் செய்யவில்லை. இயக்குநர் நெல்சன் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தேன். இளம் இயக்குநர்கள் பலரும் இப்போது நலல படங்களை கொடுத்து வருகின்றனர். நெல்சனின் காமெடி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் நிறை பண்ணுங்க நடிங்க என்று சொல்வேன்.  

நான் சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகள் அட்வைஸ் இல்லை யாரும் யாருக்கும் அட்வைஸ் பண்ண முடியாது. நான் வாழ்வில் எதிர்கொண்டதை பகிர்ந்துகொள்கிறேன். ஒரு நண்பனாகத்தான் பகிர்ந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.