ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து மீட்பு குழுவினருக்கு பிரதமர் நன்றி| Dinamalar

புதுடில்லி:ஜார்க்கண்ட் ‘ரோப்’ கார் விபத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டோருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகூட் மலையில், ரோப் கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் 60 சுற்றுலா பயணியர், 46 மணி நேரத்திற்கும் மேலாக ரோப் கார்களில் சிக்கி இருந்தனர். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ — திபெத் எல்லை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து, ரோப் கார்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டோருடன், பிரதமர் நரேந்நிர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று பேசினார். இது பற்றி பிரதமர் கூறுகையில், ”மிக திறமையாக செயல்பட்டு, மக்களை காப்பாற்றிய உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு என் நன்றிகள்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.