வீட்டில் கட்டியிருந்த நாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கைது

ராமநாதபுரத்தில் வீட்டின் முன் கட்டியிருந்த நாயை இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கி கொன்ற இளைஞர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்ட போலீசார் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

கடந்த வியாழக்கிழமை இரவில் கான்சாகிப் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் கட்டி வைத்திருந்த நாயை தாக்கிய இளைஞர்கள் சிலர், அதை துன்புறுத்தும் வகையில் சாலையில் இழுத்துச் சென்று அடித்துக் கொன்றனர்.

இது தொடர்பாக ஜனார்த்தனன் அளித்த புகாரில் இரவில் பொது மக்களை பயமுறுத்தும் வகையில் கைகளில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 இளைஞர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.