சோனம் கபூர் வீட்டில் ரூ.2.4 கோடி நகை, பணம் கொள்ளை வழக்கு.. வீட்டில் பணியாற்றிய செவிலியர், கணவர் கைது

பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீட்டில் 2 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் திருடு போன வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றிய செவிலியரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் உள்ள சோனம் கபூரின் வீட்டில் திருடு போனது குறித்து அங்கு பணிபுரிந்த 20 பேரிடம் போலிசார் விசாரித்தனர்.

இதில் சோனம் கபூரின் மாமியாரை கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்பட்ட செவிலியர் அபர்னா ரூத் வில்சன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து அபர்ணா மற்றும் அவரது கணவரை கைது செய்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.