உலக வரலாற்றிலேயே முதல் முறையாக… புகலிடக் கோரிக்கையாளர்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் பிரித்தானியா


சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரித்தானியா புகலிடக்கோரிக்கையாளர்களை 4,000 மைல்கள் தொலைவிலுள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்க உள்ளது.

உலகில் முதல் முறையாக இப்படி ஒரு ஒப்பந்தத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் செய்ய முடிவு செய்துள்ளனர் பிரித்தானிய அமைச்சர்கள்.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் நிலையில், அவர்கள் ருவாண்டாவில்தான் இருப்பார்கள்.

இந்த திட்டம் தொடர்பில் ருவாண்டா நாட்டின் தலைநகரான Kigaliயைச் சென்றடைந்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.

இன்று புகலிடக் கோரிக்கையளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைப்பது தொடர்பான ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றில் அவர் கையெழுத்திட இருக்கிறார்.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் எண்ணம் கொண்ட அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் பயத்தை ஏற்படுத்தும், அதனால் அவர்கள் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையத் தயங்குவார்கள் என பிரித்தானிய அதிகாரிகள் நம்புகிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.