டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கும் அதிரடி முடிவு!

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டின் தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்து வந்தது. இதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 5.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 8,646 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்தாலும் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று
டெல்லி
துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் வரும் 20 ஆம் தேதி டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. கொரோனா தொற்று தொடர்ந்து உயரும் பட்சத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மீண்டும் தீவிரமாக பின்பற்ற வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.