சேலத்தில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியின்றி வைக்க வந்ததாக பாஜகவினர் கைது.!

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில், ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியின்றி வைக்க வந்ததாக பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

வாசகசாலை தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு இன்று காலை வந்த பாஜகவினர், கடைக்குள் சென்று பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க முயற்சித்தனர். இதற்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதி மறுத்ததால் காவல்துறையினர்- பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின் அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்திய போதும் யாரும் கலைந்து செல்லாததால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.