மகளை காதலித்து திருமணம் செய்த வாலிபர் ஆணவக்கொலை: தந்தை உள்பட 5 பேர் கைது

திருமலை: மகளை காதல் திருமணம் செய்த வாலிபரை கூலிப்படை ஏவி கொலை செய்த பெண்ணின் தந்தை உள்பட 5 ேபர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் லிங்கராஜுபள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (30), ஊர்காவல் படை வீரர். இவர் யாதகிரிகுட்டா மாவட்டம் கல்வப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிராம வருவாய் அதிகாரி வெங்கடேசன் என்பவரது மகள் பார்கவியை காதலித்துள்ளார். இவர்கள் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பார்கவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி கடந்த 2020ம் ஆண்டு காதல்ேஜாடி வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். தத்தா நகரில் உள்ள போங்கீர் என்ற பகுதியில் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன் புதையல் கும்பலுடன் ராமகிருஷ்ணாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறி அவரை பணியில் இருந்து ஊர்க்காவல் படை நிர்வாகம் நீக்கியது. இதனால் ராமகிருஷ்ணா, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இந்நிலையில் தனது மகள் திருமணத்தால் பார்கவியின் தந்தை, கடும் ஆத்திரத்தில் இருந்தாராம். இதனால் ராமகிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி ஐதராபாத்தை சேர்ந்த கூலிப்படை கும்பலை அணுகி ₹10 லட்சம் பேரம் பேசியுள்ளார். இதில் ₹3 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். கடந்த 14ம்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராமகிருஷ்ணா, அதன்பின்னர் திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி பார்கவி, போங்கீர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது கணவர் மாயமான விவகாரத்தில் தனது தந்தை மீது சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பார்கவியின் தந்தை வெங்கடேசன் மற்றும் குடும்பத்தாரின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ராமகிருஷ்ணாவை, கூலிப்படை ஏவி வெங்கடேசன் காரில் கடத்திச்சென்று ெவட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ராமகிருஷ்ணா மற்றும் கூலிப்படை கும்பலை சேர்ந்த 4 பேர் மீது கொலை வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். ராமகிருஷ்ணா கொலை செய்து புதைக்கப்பட்ட சித்திபேட் மாவட்டத்தில் உள்ள லகடரம் பகுதிக்கு சென்று சடலத்தை தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த மேலும் 7 ேபரை போலீசார் தேடிவருகின்றனர். காதல் கணவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் தனது குழந்தையுடன் பார்கவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.