சீனாவில் குறையும் கொரோனா பாதிப்பு| Dinamalar

பீஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் மேலும் ஏழு பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து உயிரிழப்பு 17 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் அங்கு தொற்று பரவல் மெல்ல குறைய துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவில் கொரோனா தொற்று சமீபத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கியது.அந்நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் ஷாங்காயில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்தது. இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

சீனாவில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 2,753 பேருக்கு தொற்று உறுதியானது.இதில் ஷாங்காய் நகரில் மட்டும் 2,494 பேர் பாதிக்கப்பட்டனர்.தொற்று பாதிப்புக்கு ஷாங்காய் நகரில் 10 பேர் பலியான நிலையில் மேலும் ஏழு பேர் உயிரிழந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில், சீனாவின் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால், ஷாங்காய் நகரில் கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்த்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.