காரமடை அருகே வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், காரமடை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ஒரு வீட்டிற்கு நிறைய வாலிபர்கள் வருவதும் போவதுமாக இருந்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே, போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய கணவன் சிம்நாத், மனைவி ஆயிஷா பானு ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் சிக்கிய இளம்பெண்களை மீட்டு அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து வருகின்றனர்.