பந்திப்பூர் சரணாலயத்தில் காட்டு யானைக்கு இரட்டை கன்று…

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காட்டு யானை ஒன்று இரட்டை கன்று ஈன்ற சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலானது.

சரணாலயத்தின் பழைய டிக்கெட் கவுன்டர் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன் சுற்றித் திரிந்த நிறைமாத யானை ஒன்று அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று கன்று ஈன்றுள்ளது.

இந்த சம்பவத்தை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்துள்ளனர் அதோடு சிலர் அதை படம்பிடிக்கவும் செய்தனர்.

கூட்டமாக இருப்பதைக் கண்டு நீர்நிலைக்கு அருகிலேயே யானை இருந்ததைக் கண்டு வனத்துறை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்தினர்.

இதன் பின்னர் தனது குட்டிகளுடன் அது மீண்டும் காட்டுக்குள் சென்றது.

இரட்டை கன்றுடன் யானை வந்ததைப் பார்த்து வனத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் வியப்படைந்தனர்.

100 ல் ஒரு யானை மட்டுமே இதுபோன்று இரட்டை கன்று ஈனும் என்றும் இதற்கு முன் 1994 ம் ஆண்டு முதல் முறையாக பந்திப்பூரில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டை கன்று ஈன்ற ஆப்பிரிக்க யானை…. வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.