மகளுக்காக பாண் வாங்க வெளியே வந்த உக்ரைன் தந்தைக்கு நேர்ந்த சோகம்


உக்ரைனில் மகளுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த 79 வயதான தந்தை ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கார்க்கிவ் நகரத்தில் திங்கட்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று, Victor Gubarev எனும் 79 வயது நபர், தனது மகள் Yana Bachek-வுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு தனியாக வெளியே சென்றுள்ளார்.

சில மணிநேரங்கள் ஆகியும் அவர் விடு திரும்பாததால், யானா வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் கூட்டமாகவும், அருகில் அவசர ஊர்தியும் நின்றுகொண்டிருந்தது.

Yana பயத்துடன் அருகில் சென்று பார்க்கையில், Victor Gubarev கையில் தனக்காக வாங்கிவந்த பாணுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவர் தனது தந்தையை பார்த்து கதறி அழுத புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் ரஷ்யர்கள் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த ஷெல்லின் ஒரு பாகம் சிதறி விக்டர் மீது பாய்ந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.