உலக பூமி தினத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பிறந்து 32 நாட்களே ஆன ஒட்டகச்சிவிங்கி குட்டி

உலக பூமி தினத்தை முன்னிட்டு சிலியில் உள்ள பூயின் விலங்குகள் சரணாலயத்தில் பிறந்து 32 நாட்களே ஆன ஒட்டகச்சிவிங்கி குட்டி பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

பிறந்தது முதலே தாயுடன் இருந்து வந்த பெனிட்டா என பெயரிடப்பட்டுள்ள அந்த ஒட்டகச்சிவிங்கி குட்டி நேற்று தான் அதன் தந்தை க்ரூகர் மற்றும் சகோதரி கெமாவுடன் இணைந்தது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என சரணாலயத்திற்கு வந்த அனைவருமே பெனிட்டாவை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.