நடன நிகழ்ச்சி பார்க்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்: 10 முதல் 15 வயதுடைய 6 சிறுவர்கள் கைது

ராஞ்சி: ராஞ்சியில் நடன நிகழ்ச்சி பார்க்க சென்ற சிறுமியை 6 பேர் கொண்ட சிறார்கள் கூட்டு பலாத்காரம் செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் குந்தி போலீசார் நேற்று 10 முதல் 15 வயதுக்கு உட்பட 6 சிறுவர்களை கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘குந்தி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், பக்கத்து கிராமத்தில் நடந்த நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த சில சிறுவர்கள், சிறுமியிடம் கேலி, கிண்டல் செய்துள்ளனர். பின்னர் நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நள்ளிரவில் அந்த சிறுமியும் அவரது நண்பர்கள் இருவருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களின் பின்னால் வந்த 6 சிறுவர்கள், அந்த சிறுமியையும், அவருடன் வந்த மேலும் 2 நண்பர்களையும் தாக்கினர். பின்னர் அந்த சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று அழைத்துச் சென்று 6 சிறுவர்களும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மயக்க நிலையில் கிடந்த சிறுமியை அவருடன் சென்ற மற்ற இருவரும் மீட்டு, அவரது வீட்டில் கொண்டு வந்துவிட்டனர். சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்த போது, அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 6 சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.