மின்தேவையை பூர்த்தி செய்ய 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், மின் கட்டுப்பாட்டு மையம், 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை மின் துறைஅமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

அனல் மின் நிலையங்களுக்கு ஒரு நாளுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால், 47 முதல் 50 ஆயிரம் டன் வரை மட்டுமே வருகின்றன.

வெளிநாடுகளில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. எனவே, ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு, 4.80 லட்சம் டன் நிலக்கரி பெற டெண்டர் கோரப்பட்டது.

அதில் பங்கேற்ற 4 நிறுவனங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, விரைவில் அந்த நிலக்கரியை பெற்று உற்பத்திக்கு பயன்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம், இயக்குநர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.