பேராசிரியர்களுக்கு சம்பளம்: அரசுக்கு சம்மேளனம் கோரிக்கை| Dinamalar

புதுச்சேரி, :புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் 131 பேர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 182 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பொறியியல் கல்லுாரியாக இருந்தபோது அனைவருக்கும் மாத ஊதியம் காலதாமதமில்லாமல் வழங்கப்பட்டது.தற்போது, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்ற பின், மாத ஊதியம் சரிவர வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிப் பலன்களையும் வழங்கவில்லை.கடந்த மார்ச் மாத ஊதியம் இன்று வரை ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த பிரச்னையில் தலையிட்டு, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடைய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.