பயணிகளுடன் வைத்து பஸ்சை எரித்த மாவோயிஸ்ட்

திருமலை: ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், சிந்தூரூ மண்டலம் கொத்தூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒடிசாவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற ஒரு தனியார் பஸ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாவோயிஸ்டுகள் மடக்கி நிறுத்தினர். பயணிகள் கீழே இறங்குவதற்குள் பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் பஸ்சில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அவ்வழியாக செல்லும் வாகன போக்குவரத்து முற்றிலுமாக காவல்துறையால் நிறுத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.