நேபாளத்தில் சாலை விபத்து 4 இந்தியர் உட்பட ஐவர் பலி| Dinamalar

காத்மாண்டு, : நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில், இந்திய சுற்றுலா பயணியர் நான்கு பேர் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் அகர்வால், 55, பிமல் சந்திர அகர்வால், 40, சாதனா அகர்வால், 35, சந்தியா அகர்வால், 40, ஆகிய நான்கு பேரும், அண்டை நாடான நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

தலைநகர் காத்மாண்டு நகரில் இருந்து, பொக்காரா மலைப் பிரதேசத்துக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, காரில் காத்மாண்டுவுக்கு திரும்பினர். காரை நேபாளத்தை சேர்ந்த தில்பகதுார் பாஸ்நெத் என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.தாதிங் மாவட்டம் பிரித்வி நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, காத்மாண்டுவில் இருந்து வந்த பஸ், அதன் மீது மோதியது. இதில், காரில் இருந்த ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐவரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.