பீஜிங்கில் அனைவருக்கும் சோதனை | Dinamalar

பீஜிங், : நம் அண்டை நாடான சீனாவின், ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பீஜிங்கிலும் தொற்று பரவத் துவங்கியுள்ளது.பீஜிங்கில், நேற்று முன்தினம், ௩௫ லட்சம் பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ௩௨ பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதியானது.

புதிய பரவலில், பீஜிங்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ௧௩௫ ஆக உயர்ந்துள்ளது. அங்கு, கொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து, பீஜிங் நகரில் வசிக்கும், ௨.௧ கோடிக்கும் அதிகமான மக்களிடம், தொற்று பரிசோதனை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, ஷாங்காய் நகரில், நேற்று முன்தினம் கொரோனாவுக்கு ௩௨ பேர் பலியானதையடுத்து, தொற்றின் புதிய பரவலுக்கு பலியோனோர் எண்ணிக்கை, ௧௯௦ ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.