ஷிகர் தவான் அதிரடி; சென்னை அணிக்கு 188- ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

மும்பை,
 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

பஞ்சாப் அணியில் துவக்க வீரர் ஷிகர் அதிரடி காட்டினார். ஒரு முனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் தவன் பொறுப்புடன் விளையாடியதால், அந்த அணியின் ரன்வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பனுகா ராஜபக்சேவும் (44 ரன்கள்) ஓரளவு சிறப்பான பங்களிப்பை அளித்தார். 
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187- ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் அடித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.