Rajinikanth:ரஜினியும், தனுஷும் சேர்ந்து இதுவரை அதை செஞ்சதே இல்லையாம்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
தனுஷ்
. திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர்.

கணவரை பிரிந்த கையோடு மீண்டும் படம் இயக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்
ஐஸ்வர்யா
. சமூக வலைதள கணக்குகளில் இருந்து தனுஷின் பெயரை நீக்கிவிட்டார். இதன் மூலம் இனி தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இந்நிலையில் தனுஷ் தன் தலைவர் ரஜினி பற்றி கூறியது குறித்து பேசப்படுகிறது. ரஜினியும், தனுஷும் ஒரே துறையில் இருந்தாலும் வீட்டில் வேலை பற்றி பேசியதே இல்லையாம். இந்த தகவலை சொன்னதே தனுஷ் தான்.

அதெப்படி ரஜினியும், தனுஷும் சந்தித்தபோது வேலை பற்றி பேசாமல் இருந்திருப்பார்கள் என ரசிகர்கள் வியக்கிறார்கள்.

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க ரஜினி தான் பெரும் முயற்சி செய்தார். ஆனால் பலனில்லாமல் போய்விட்டது.

நீ செஞ்சதையே நானும் செய்யப் போறேன்: சவுந்தர்யாவிடம் சொன்ன ஐஸ்வர்யா?
இதற்கிடையே தங்கை சவுந்தர்யாவின் கணவர் விசாகனை வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தன் கணவர் மீண்டும் படங்களில் நடிப்பது சவுந்தர்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.